காலில் விழுந்து கதறினேன் : பிரித்தானியப் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

253

abuse

பிரித்தானியாவில் 18 வயது இளைஞன் ஒருவர் 58 வயதுடைய பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் Workington நகரின் Cumbria என்ற இடத்தில் 58 வயதான பெண் ஒருவர் தனது நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அவரை தொடர்பு கொண்ட 18 வயதேயான இளைஞன் ஒருவன் ஆள்நடமாட்டம் இல்லாத அந்த இடத்தை பயன்படுத்திக் கொண்டு அவரை கீழே தள்ளி பாலியல் தாக்குதலை நடத்தியுள்ளான்.

அவர் ஒத்துழைக்க மறுக்கவே அவரது முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளான். ஒத்துழைக்கவில்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்.

முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் அவனிடம் அந்த பெண்மணி கதறியுள்ளார். இருப்பினும் அவன் அந்த பெண்ணை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளான்.

இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் அவனிடம் கெஞ்சியுள்ளார். ஆனாலும் அவன் அவரை விடவில்லை.

அந்த பெண் தனது முகத்தில் உள்ள ரத்தத்தை அவன் சட்டையில் துடைத்துள்ளார். இதுவே அவனை எளிதில் பிடிக்க எங்களுக்கு உதவியது என்று கூறியுள்ளார்.

பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அந்த இளைஞனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.