வவுனியா புளியங்குளம் இந்துக் கல்லூரியில் சரஸ்வதி சிலை திறந்து வைப்பு !(படங்கள்)

933

வ/புளியங்குளம் இந்துக்கல்லூரியில் சரஸ்வதி சிலை திறப்பு விழா நிகழ்வு நேற்று (2016.10.09) இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் திரு.ச.பரமேஸ்வரநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ மயூரன், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வினோ, சிவன் பவுண்டேசன் ஸ்தாபகர் திரு. கணேஸ் வேலாயுதம், ஆசிரியர் நிலைய முகாமையாளர் திரு.சு.ஜெயச்சந்திரன், புளியங்குளம் ஓய்வுநிலை கிராம சேவையாளர் திரு. யோகராசா, மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இவர்களுடன், ரூபா மூன்று இலட்சம் ( 300,000/=) பெறுமதியான சிலையினை தனது துணைவியாரின் ஞாபகார்த்தமாக அமைத்துத் தந்த லண்டனில் வசிக்கும் திரு.கணேசநாதன்(திரு) அவர்களும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். பெறுமதியான அன்பளிப்பினை வழங்கிய நல்லுள்ளத்திற்கும், நிகழ்விற்கு வருகைதந்த அனைவருக்கும் கல்லூரிச் சமூகம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

14520581_1690082294643223_1531698297343986855_n 14525143_1690083317976454_6912945133823138244_o 14542448_1690083067976479_636149135718543127_o 14556654_1690082551309864_5403951421174594681_o 14567425_1690083397976446_3079935542541439077_o 14570637_1690082487976537_5764265370832783392_o 14589874_1690082344643218_6002887263436927014_o 14589902_1690082601309859_7476881845877321677_o 14601103_1690082924643160_8271237230291107098_n 14612424_1690082851309834_6240111862143361071_o 14615660_1690082651309854_8382937929204996753_o 14633549_1690082977976488_1555716503261466315_o