வ/புளியங்குளம் இந்துக்கல்லூரியில் சரஸ்வதி சிலை திறப்பு விழா நிகழ்வு நேற்று (2016.10.09) இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் திரு.ச.பரமேஸ்வரநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ மயூரன், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வினோ, சிவன் பவுண்டேசன் ஸ்தாபகர் திரு. கணேஸ் வேலாயுதம், ஆசிரியர் நிலைய முகாமையாளர் திரு.சு.ஜெயச்சந்திரன், புளியங்குளம் ஓய்வுநிலை கிராம சேவையாளர் திரு. யோகராசா, மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இவர்களுடன், ரூபா மூன்று இலட்சம் ( 300,000/=) பெறுமதியான சிலையினை தனது துணைவியாரின் ஞாபகார்த்தமாக அமைத்துத் தந்த லண்டனில் வசிக்கும் திரு.கணேசநாதன்(திரு) அவர்களும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். பெறுமதியான அன்பளிப்பினை வழங்கிய நல்லுள்ளத்திற்கும், நிகழ்விற்கு வருகைதந்த அனைவருக்கும் கல்லூரிச் சமூகம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.