வவுனியா நெளுக்குளம் பாடசாலைக்கு முன்பாக இன்று (10.10.2016) காலை 7.00 மணி முதல் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பாடசாலையின் பழைய மாணவர்களால் உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது..
அவ் ஐந்து கோரிக்கை பின்வருமாறு..
1.அமைக்கப்படும் அதிபர் விடுதியினை உடனடியாக நிறுத்தவும்.
2.ஒதுக்கப்பட்ட நிதியினை பூரணமாக பாடசாலைக்கு பயன்படுத்த வேண்டும்.
3.பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாகத் தெரிவு இடம்பெற வேண்டும்
4.பழைய மாணவர்சங்க நிர்வாகத் தெரிவு இடம்பெற வேண்டும்.
5.பாடசாலை நலனுக்காக பாடுபடும் ஆசிரியர்கள்,பாடசாலை ஊழியர்கள் மீது அழுத்தம் பிரயோகிப்பதை நிறுத்த வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 30க்கு மேற்ப்பட்ட பழைய மாணவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர்கள், பொலிஸாருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
பெருமளவிலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.