நடிகர் சாந்தனுவிடம் பொலிஸ் அடாவடி!!

428

santhanu

நடிகர் சாந்தனு பொலிஸ் அதிகாரி ஒருவர், அடாவடியில் ஈடுபட்டதால் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் எனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த பொழுது எங்கள் காரை பொலிசார் ஒருவர் நடுரோட்டில் மடக்கி ரகளையில் ஈடுபட்டார்.

மேலும், தரக்குறைவாக பேச ஆரம்பிக்கவே நான் அங்கிருந்து காரை எடுத்து வந்துவிட்டேன்.

அந்த பொலிசார் பெயர் தெரியவில்லை, ஆனால் அவர் மது அருந்தியிருந்தது போல இருந்தது என தெரிவித்துள்ளார்.