தமிழகத்தின் கோவை ரயில் நிலையம் அருகே நேற்றிரவு இளம் காதல் ஜோடி, மது போதையால் நடக்க முடியாமல் தள்ளாடியபடி சென்றுள்ளனர்.
ஆண், பெண் பேதமின்றி இருவரும் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள், வாகன ஓட்டிகள் ஆகியோரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டனர்.
கோவை ரயில் நிலையித்தில் காதல் ஜோடிகள் மதுமயக்கத்தில் தள்ளாடியது காண்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது.
அப்போது, அந்த இளம்பெண் சுவற்றில் மோதி கீழே விழந்துள்ளார், இதனால் அப்பெண்ணை வாகன ஓட்டுநர்கள் தூக்க முயற்சிக்கையில், காதலன் அவர்களோடு சண்டையிட்டுள்ளான்,
அதன்பிறகு அந்த ஜோடிகள் தள்ளாடியபடி அங்கிருந்து சென்றுவிட்டனர்.






