அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சசிகலாவை துரத்த வேண்டும், புஷ்பா அழைப்பு!!

507

jeya

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சசிகலா மற்றும் உறவினர்களை துரத்த அதிமுகவினர் முன்வர வேண்டும் என்று ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா கூறியதாவது:முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து யாருக்குமே தெரியவில்லை.

ராகுல் காந்தி, ஸ்டாலின் போன்றவர்களுக்கும் கூட தெரிவிக்கப்படவில்லை. அதிமுக தொண்டர்கள் கொந்தளித்து போயுள்ளனர். அதிமுக தொண்டர்கள் பொறுமையாக இருந்து கொண்டிருக்கின்றனர்.

அதிமுகவினர் அப்பல்லோ மருத்துவமனைக்குள் நுழைந்து சசிகலாவையும் அவரது உறவினர்களையும் வெளியேற்றத்தான் போகின்றனர்.

இவர்கள் யார் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களை மறைப்பதற்கு? நிச்சயம் அவர்களை அதிமுக தொண்டர்கள் துரத்தத்தான் போகின்றனர். இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.