வவுனியா தோணிக்கல் லக்கபான வீதியில் நேற்று (09.10.2016) அதிகாலை முச்சக்கரவண்டியொன்று தீப்பற்றியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா தோணிக்கல் லக்சபான வீதியில் நேற்று (09.10.2016) இரவு 9 மணிக்கும் இன்று (10.10.2016)அதிகாலை 3 மணிக்குமிடையில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வவுனியா தோணிக்கள் ஶ்ரீ லக்ஷ்மி வீதியை சேர்ந்த தம்பிமுத்து குணசேகரம் (46) என்பவருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியே தீப்பிடிப்புக்கு உள்ளாகியுள்ளது.
முச்சக்கர வண்டி உரிமையாளரால், முச்சக்கரவண்டி விஷமிகளால் திட்டமிட்டு தீக்கிரையாக்கியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸார் விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதா அல்லது முச்சக்கர வண்டியின் மின்னொழுக்கினால் தீப்பிடித்ததா என்று இரசாயண பகுப்பாய்வு அறிக்கையின் பின்பே தெரிவிக்கமுடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச் விபத்துத் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் செனரத் தலைமையிலான குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.