ஐதராபாத்தில் ஒரு சிறுமியின் வாழ்க்கையை சீரழிக்க சகோதரனுக்கு உதவியுள்ள சகோதரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத், ஜரினகவை சேர்ந்தவர் அஜித் குமார் (19). இவர் அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை 2 வருடமாக பின் தொடர்ந்து வந்துள்ளார்.
அந்த சிறுமிக்கு அவரின் சகோதரி நல்ல பழக்கம் என்பதால் அஜித் குமாரின் தொடர் தொல்லைகளை சிறுமி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாருமில்லை என்று சிறுமியை அஜித் குமாரின் சகோதரி அழைத்துள்ளார்.
சிறுமியும் அதை நம்பி அவரது வீட்டிற்கு செல்ல, அங்கிருந்த அஜித் குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் சிறுமியை அழைத்து வந்து அஜித் குமாரும், அவருடைய சகோதரியும் அவரது வீட்டில் விட்டுள்ளனர்.
மேலும், இது குறித்து வெளியே சென்னால் சிறுமியின் சகோதரனை கொன்றுவிடுவோம் என்று சிறுமியின் குடும்பத்தாருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இருப்பினும் அஜித் குமார் மீது சிறுமியின் பெற்றோர் பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார், தலைமறைவாக உள்ள அஜித் குமாரை தேடி வருகின்றனர்.






