மனைவியை அடியாள் வைத்து கொன்ற கணவன்!!

248

dead

கனடாவில் மனைவியை அடியாள் மூலம் கணவன் கொலை செய்ததை தொடர்ந்து இருவருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Cloverdale என்ற நகரில் Amanpreet Bahia மற்றும் Baljinder Singh Bahia(33) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.

இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டையிலும் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், மனைவியுடன் வாழ்க்கையை தொடர நினைக்காத கணவர் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனை ஒரு அடியாள் மூலம் செய்ய தீர்மானித்துள்ளார். Eduard Baranec என்ற நபரையும் அவர் ஏற்பாடு செய்துள்ளார்.

திட்டங்கள் அனைத்தும் தயாரான நிலையில், கடந்த 2007ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வீட்டில் உள்ள சமையல் அறையில் மனைவி அடியாள் மூலம் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார்.

கொலை நிகழ்ந்த 4 ஆண்டுகள் ஆன பின்னரும் கொலையாளியை பொலிசாரால் நெருங்க முடியவில்லை.

ஆனால், விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார் கடந்த 2011ம் ஆண்டு கணவரையும் அடியாளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பல்வேறு கட்டமாக நடைபெற்று வந்த விசாரணையின் இறுதியில் கணவர் மற்றும் அடியாள் தான் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு இருவரையும் பரோலில் வெளியே விடக்கூடாது எனவும் நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.