வவுனியாவின் பிரபல பெண் வைத்தியர் உட்பட இருவர் விபத்தில் பலி!!

629

vavuniya-accident
கொழும்பில் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றுகொண்டிருக்கும்போது இன்று (11.10.2016) அதிகாலை 4.30 மணியளவில் மகோ பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த பிரபல பெண் வைத்திய அதிகாரியான கௌரி மனோகரி நந்தகுமார் மற்றும் அவரது பெறாமகளான சிவதுர்க்கா சத்தியநாதன்(19), ஆகியோர் பயணித்த வாகனம் இன்று அதிகாலை கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தவேளை மகோ பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனொமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாராகிய வவுனியா பொது வைத்தியசாலையின் டாக்டர் திருமதி கௌரிதேவி நந்தகுமார் (49) என்பவரும், அவருடைய சகோதரியின் மகளாகிய சிவதுர்க்கா சத்தியநாதன்(19) ஆகிய இருவருமே முதலில் இறந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

மாகோ வைத்தியசாலையில் பொலிசாரினால் கையளிக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரினதும் சடலங்களை குருணாகலை வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை இவர்களின் வாகன சாரதியான சிவநாதன் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான முழுமையான செய்திக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.