வவுனியாவில் இன்று (11.10.2016) காலை சர்வதேச சிறுவர் தினத்தில் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை நிறுத்துமாறு கோரி பெண்கள் அமைப்புக்களினால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
சிறுவர்கள் தினத்தில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறும், வித்தியா, ஹரிஸ்ணவி போன்ற மாணவிகளுக்கு நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு கோரி இன்று (11.10.2016) காலை வவுனியா தபாலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்து அரசாங்க அதிபர் றோகண புஸ்பகுமாரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதில் பெண்கள் அமைப்புக்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.