வவுனியா தெற்கு கல்வி வலய ஆரம்பக்கல்விப்பிரிவின் சிறுர்வர் தினநிகழ்வுகள் ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி CSM தேவசேனா தலைமையில் இறம்பைக்குளம் மகளீர் .வித்தியாலயத்தில் நேற்று (10.10.2016) நடைபெற்றது .
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வலயக்கல்விப்பணிப்பாளார் திரு.முத்து.இராதாகருஸ்ணன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.M.P.நடராஜ் அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டடு சிறப்பித்தனர்.
புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட நிலையில் முதல் பத்து இடங்களையும் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் திரு. முத்து.இராதாகிருஸ்ணன்,கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.M.P நடராஜ் ஆகியோர்களால் வெற்றிக்கேடயங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் ஆரம்பகல்வி மாணவ மாணவிகளின் பொம்மலாட்டம்,பேச்சு,நடனம் பாட்டு போன்ற கலைநிகழ்வுகளும் விழாவை அங்கரித்தன.
படங்கள் : தம்பிபிள்ளை சுதன்