வவுனியாவில் வீட்டுக்குள் புகுந்த முதலை மக்களால் பிடிப்பு!!

209

 
இன்று (12.10.2016) அதிகாலை 5.30 மணியளவில் கூமாங்குளம் இரண்டாம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் முற்றத்தில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட முதலையை கிராமவாசிகள் கட்டிவைத்துள்ளனர். அத்துடன் பொலிஸார் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்ததையடுத்து அவர்கள் வரும்வரை முதலையை கட்டி வைத்து கிராமத்தவர்கள் காவல் காத்து நின்றுள்ளார்.

அதேவேளை கடந்த 05.10.2016 காலை 7.30 மணியளவில் வவுனியா சிதம்பரபுரம் பகுதியிலுள்ள குளத்திலிருந்த முதலை ஒன்று வீட்டிற்குள் நுழைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்றதுடன் வவுனியா வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் முதலையினை பிடித்து கட்டி பொதுமக்கள் அற்ற காட்டுப்பகுதியில் விடுவித்தும் குறிப்பிடத்தக்கது.

1 image-0-02-06-0ba447f0b6f3ab3d5e42c79109767941ec5f204e98a0f9bf3fd5acd336ff357a-v image-0-02-06-16428563dd7360531cba7aad1569f7bba74f1f3896d3086361a1d0d8667f5399-v image-0-02-06-d750c65c88913d859661b166e9454239d6e73def045ca92424cdf8b03cf6585a-v image-0-02-06-ee273fe7c338f672e3737a4cc994281cd2dcb72b746f6c4492713fb14493d190-v