மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி!!

843

fall

நிட்டம்புவ நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 09.00 மணி தொடக்கம் நாளை அதிகாலை 05.00 மணி வரையான காலப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வாறு உயிரிழந்தவர் 16 வயதான வில்கமுவ – நாமினிஓய பகுதியைச் சேர்ந்த ஒருவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.