வவுனியாவில் மலைய மக்களுக்கு ஆயிரம் ரூபா வேண்டி ஆர்ப்பாட்டம்!!

307

 
வவுனியாவில் இன்று(12.10.2016) காலை பொது அமைப்பக்களின் ஏற்பாட்டில் சிந்தாமணி பிள்ளையார் ஆலய முன்றலிருந்து ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டப் பேரணியானது கண்டி வீதி வழியாக மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் பசார் வீதி வழியாக தினச்சந்தை சென்று அங்கிருந்து வவுனியா மாவட்ட செயலகம் சென்று அரசாங்க அதிபர் எம்.பி.ரோகண புஸ்பகுமாராவிடம் ஜனாதிபதியிடம் கையளிக்கமாறு மகஜர் கையளிக்கப்பட்டது.

இன்றை ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினாகளான செ.மயூன், ம.தியாகராசா முன்னாள் மகாணசபை உறுப்பினர் எம்.பி. நடராஜ், முன்னாள் நகரசபை நகர பிதா சந்திரகுலசிங்கம், மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், என நூற்றுக்கும் அதிகமானர்கள் கலந்து கொண்டனர்.

அடிக்காதே அடிக்காதே
தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே

உழைத்துக் கொடுப்பவர் வீதியிலே
உண்டுகொழுத்தவர் மாளிகையில்

வெல்லட்டும் வெல்லட்டும்
தோட்டத் தொழிலாளர் போராட்டம்

வெல்லட்டும் வெல்லட்டும்
உரிமைக்கான போராட்டம்

உழைப்பிற்கான போராட்டம்
வெல்லட்டும் வெல்லட்டும்

வேலைகொடு வேலைகொடு
உழைப்பிற்கேற்ற ஊதியம் கொடு

அடக்குமுறைகள் நிலைத்ததாக
உலகெங்கிலும் வரலாறில்லை

சுரண்டல்காரர்கள் வாழ்ந்ததாக
சரித்திரம் இதுவரை கேட்டதில்லை

வாழிய வாழிய வாழியவே
தொழிலாளர் ஒற்றுமை

வாழிய வாழிய வாழியவே
வேண்டாம் வேண்டாம் வேண்டாமே

தரகு அரசியல் வேண்டாமே
மத்திய அரசே மத்திய அரசே

பாட்டாளிகளின் கோரிக்கையை
நிறைவேற்று நிறைவேற்று

வேண்டாம் வேண்டாம் வேண்டாமே
காலதாமதம் வேண்டாமே

வாழிய வாழிய வாழியவே
தொழிலாளர் ஒற்றுமை
வாழிய வாழிய வாழியவே

போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டனர்.

1 img_1233 img_1234 img_1237 img_1238 img_1239 img_1242 img_1245 img_1247 img_1251 img_1252 img_1255 img_1256 img_1258 img_1260 img_1263 img_1266 img_1268 img_1270 img_1271 img_1273 img_1274 img_1275