வயது ஒரு தடையல்ல : யுவராஜ் சிங்!!

334

Yuvraj-Singh

இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் 2011ல் நடந்த உலகக் கிண்ண போட்டியில் தொடர் நாயகன் விருது வென்றார்.
இதன் பின் ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோயிலிருந்து மீண்ட 31 வயதான இவர், 2012 T20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.

தற்போது போம் இல்லாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். 2015 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள இவர் சமீபத்தில் பிரான்ஸ் சென்று புகழ் பெற்ற டிம் எக்செட்டரிடம் பயிற்சி எடுத்தார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 32வது வயதை எட்ட உள்ள இவர் விரைவில் இந்தியாவுக்காக விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து யுவராஜ் சிங் கூறுகையில் விரைவில் 32வது வயதை எட்டப் போகிறேன். இருப்பினும் டெஸ்ட், ஒருநாள் T20 என்று மூன்று விதமான கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த போது கடினமாக பயிற்சி மேற்கொண்டேன். தற்போது உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

ரஞ்சிக் கிண்ணத் தொடருக்கு முன் சில உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளேன். இதன் மூலம் இழந்த போமை மீட்டு விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்.

இந்தியாவில் திறமையான இளம் வீரர்கள் நிறைய உள்ளனர். இவர்கள், இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு நிறைய உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இளம் வயதில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது அவசியமில்லை. எந்த வயதில் வாய்ப்பு கிடைத்தாலும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, வேகப்பந்துவீச்சாளர் ஷகிர் கானுக்கு தாமதமாகத் தான் இந்திய அணியில் இடம் கிடைத்தது.

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் நிறைய போட்டிகளில் வெற்றி தேடித் தந்தார் என்றும் 2015ல் நடக்கவுள்ள உலகக் கிண்ணத் தொடரில் விளையாட விரும்புகிறேன் எனவும் கூறினார்.