உள்ளாடையில் அதிநவீன கருவியுடன் பரீட்சைக்கு வந்து மாட்டிக்கொண்ட பெண்!!

335

exam

ஜேர்மனியில் பரீட்சையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் உள்ளாடையில் அதிநவீன கருவியை மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்தின் Sundern நகரிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இங்கு கடந்த ஜீன் மாதம் நடந்த தேர்வில், 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தேர்வு எழுத வந்துள்ளார். அவரை பரிசோதித்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தன்னுடைய உள்ளாடையில் அதிநவீன கமெரா கொண்ட கருவியை பொருத்தியிருந்தார்.

இதன்மூலம் உதவி செய்யும் நபர்கள் வினாத்தாளை பார்க்க முடியும், இதற்கான விடைகளை பெறுவதற்காக காதினுள் ஹெட்போனையும் சொருகியிருந்தார்.

இதுதொடர்பான புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ள பொலிசார், இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.