வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கான வீதிபோக்குவரத்துச் செயற்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களினால் இன்று (12.10.2016) காலை சிந்தாமணிபிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து வவுனியா புகையிரத நிலைய வீதியில் வீதி விபத்துக்கள் ஏற்படும் விதம் குறித்த வீதி நாடகமும் இடம்பெற்றது.
வவுனியா நகர பாடசாலை மாணவர்கள் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவர்கள் இதில் பெருமளவில் பங்குபற்றியிருந்தனர்.
வவுனியா போக்குவரத்துப் பொலிசார் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி, வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோரும் இதனை பார்வையிட வந்திருந்தனர்.