வவுனியாவில் வீதிப்போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வு!!

214

 
வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கான வீதிபோக்குவரத்துச் செயற்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களினால் இன்று (12.10.2016) காலை சிந்தாமணிபிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து வவுனியா புகையிரத நிலைய வீதியில் வீதி விபத்துக்கள் ஏற்படும் விதம் குறித்த வீதி நாடகமும் இடம்பெற்றது.

வவுனியா நகர பாடசாலை மாணவர்கள் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவர்கள் இதில் பெருமளவில் பங்குபற்றியிருந்தனர்.

வவுனியா போக்குவரத்துப் பொலிசார் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி, வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோரும் இதனை பார்வையிட வந்திருந்தனர்.

 1 img_1282 img_1283 img_1285 img_1286img_1287 img_1289 img_1292img_1293 img_1296 img_1300img_1303 img_1309 img_1317img_1319 img_1327 img_1331