கோர விபத்தில் இருவர் பலி, ஏழு பேர் படுகாயம்!!

207

 
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாரன்டன் தோட்ட பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை 06.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. மரக்கறி தோட்டமொன்றுக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் நுவரெலியாவுக்கு திரும்பி சென்ற வேளை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

1 2 4 5