தெற்கில் புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி இன்று காலை 5.30 மணியளவில் புளியங்குளம் நகரில் ஆரம்பமாகி இன்று (13.10.2016) காலை 9.50 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்த பேரணியானது. வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களின் பாண்ட் வாத்தியத்துடன் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நிறைவடைந்தது.
இப் பேரணியில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், மற்றும் சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சத்தியசீலன், வவுனியா வர்த்தகர்கள், அரசஉத்தியோகத்தர்கள், மாணவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
புற்றுநோய் சிச்சைப் பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி இது வரை 189 கிலோமீற்றர் தூரம் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளையதினம் இந்த நடைபவனி மதவாச்சி நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.