வவுனியா நகரை வந்தடைந்த மகேல ஜெயவர்த்தன : மாணவர்கள் உட்பட மக்கள் அலையென திரண்டு வரவேற்பு!!

1146

 
தெற்கில் புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி இன்று காலை 5.30 மணியளவில் புளியங்குளம் நகரில் ஆரம்பமாகி இன்று (13.10.2016) காலை 9.50 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்த பேரணியானது. வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களின் பாண்ட் வாத்தியத்துடன் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நிறைவடைந்தது.

இப் பேரணியில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், மற்றும் சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சத்தியசீலன், வவுனியா வர்த்தகர்கள், அரசஉத்தியோகத்தர்கள், மாணவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

புற்றுநோய் சிச்சைப் பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி இது வரை 189 கிலோமீற்றர் தூரம் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளையதினம் இந்த நடைபவனி மதவாச்சி நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 dsc_0001 dsc_0002 dsc_0003 dsc_0005 dsc_0006 dsc_0010 dsc_0012 dsc_0022 dsc_0023 dsc_0024 dsc_0027 dsc_0034 dsc_0036 dsc_0037 dsc_0038 dsc_0040 dsc_0044 dsc_0045 dsc_0048 dsc_0052 dsc_0053 dsc_0055 dsc_0056 dsc_0058 dsc_0061 dsc_0063 dsc_0067 dsc_0068 dsc_0069 dsc_0072 dsc_0077 dsc_0079 dsc_0083 dsc_0084 dsc_0085 dsc_0086 dsc_0087 dsc_0095 dsc_0096 dsc_0100 dsc_0101 dsc_0103