வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியும் அவரது பெறாமகளும் கடந்த 11.10.2016 அன்று மாகோவில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று வவுனியாவிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.
வவுனியா பொது வைத்தியசாலையில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் அஞ்சலிக் கூட்டம் இடம்பெற்றது.
வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், தாதிய பயிற்சியாளர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தியதுடன் வைத்தியரின் அஞ்சலி உரையும் இடம்பெற்றது.