செல்பி மோகத்தால் உயிரிழந்த சீனப் பெண்ணின் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!!

486

selfi

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலி – அம்பலாங்கொட பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்றில் தூக்கி வீசப்பட்ட நிலையில் சீனப் (25) பெண் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த பெண்ணின் சடலம் அவரது பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொரளை பொது மயானத்தில் சீனப் பெண்ணின் இறுதி சடங்குகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண், புகையிரத மிதி பலகையில் நின்றுக் கொண்டு செல்பி எடுத்த காரணத்தினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சீனப் பெண் செல்பி எடுத்துக் கொண்டிருந்த வேளையில், புகையிரதம் அம்பலாங்கொட மாதம்பை நிலையத்தை அடைந்ததை அடுத்து இந்த விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.