வவுனியாவில் கடும் வறட்சி காரணமாக 3111 பேர் பாதிப்பு!!

231

drought

நாட்டில் கடந்த சில மாதங்களான ஏற்ப்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியாவில் 938 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதான வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 938 குடும்பங்களை சேர்ந்த 3111 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒமந்தை, ஆசிக்குளம், பூந்தோட்டம் , பறனாட்டாங்கல், சமனங்குளம் ஆகிய பகுதிகளில் 464 குடும்பங்களும்,

சன்னாசிப்பரந்தன், நெடுங்கேனி தெற்கு, நைனாமடு, அனந்தர்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் 474 குடும்பங்களும் வவுனியா மாவட்டத்தில் 938 குடும்பங்களும்  கடும் வறட்சி காரணமாக பாதிப்படைந்துள்ளதாகவும் இக் கிராமங்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் அவர் மேலும் தெரிவித்தார்.