வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கையெழுத்து வேட்டை!!

404

 
கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளை விடுதலை செய்யமாறு கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் வவுனியா மாவட்ட அனுசரனையுடன் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் வேட்டை இன்று (14.10.2016) காலை 10 மணிக்கு வவுனியா இலுப்பபையடிப் பகுதியில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், இ.இந்திரராசா, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் நி.பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

இக் கையெழுத்து வேட்டையில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

1 image-0-02-06-2e102e473de7c48dc3cd8db895ff34e6bd33cfbcc3896095c1eb62de3072ab5d-v image-0-02-06-70ad35892f01c64289129e8032354a3fa377ee1d70186377a7719e16e6329cfe-v image-0-02-06-31070c8b0022c16369a318e9bbaab7900fa58f965b249684e83cb4e14546db09-v image-0-02-06-74462d0d18589779ace5e70f403798daaa2ab018aa3153d6ef4cb86d9a92ef8a-v image-0-02-06-a06892bb360733555202d43e309f1ef516b3563f1050555a62f04766fccc2a82-v image-0-02-06-ae41665bba8844e6376b31c7368c1a3ee087b617a0b8e6815df20222c5a3de98-v image-0-02-06-b1b8d70ceee1bed63481724f65acf491876cf2c7c0942052c86de5c311f3c376-v image-0-02-06-b8bd6243a3c121db56288d149ebdf5a45bc235d4d86ca7bd119c09b979ffca70-v image-0-02-06-b43e0afda32f1dc0312141a220757ff71679d904e2e29b02ad8197faeaab9cb8-v image-0-02-06-bb298c1565a1801cc186e7fc6536997a0ec4e9b29307c411553f07b471f92352-v image-0-02-06-c50bc67cf831c9a93f6642bfae5c2309c8a08d8bfcd7b7aa27318bf543fd614c-v image-0-02-06-dae9182610469599a1ef6b2ad16aaafb6ec11fee45df3a0c5497a5c9140bc994-v image-0-02-06-f59a416e5725af0769985f9623fe02f6641c6b7dfca49efea3bc75d40fd039d7-v