வவுனியா மூன்றுமுறிப்பு தச்சனங்குளத்தில் இன்று (14.10.2016) மதியம் 1.20 மணியளவில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
இன்று (14.10.2016) காலை தனது தோட்டக் கிணற்றை புணரமைப்பதற்காக முற்பட்டவேளை கிணற்றில் ஆயுதங்கள் கிடந்ததைக் கண்ட வீட்டு உரிமையாளர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாரால் கிளைமோர் குண்டு, டேத் கோட், எட்டு மிதிவெடி, ஆறு வெளிச்சக்கூடு, கிளைமோர் குண்டு ஒன்று என பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை மேலும் பல ஆயுதங்கள் கிணற்றினுள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கிணற்றிலிருள்ள நீரை நீர்ப்பம்பி மூலம் அகற்றி வருகின்றனர்.
அத்துடன் மீட்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.