127 கோடி மக்களுக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்: உருக வைக்கும் வீடியோ!!

518

dead

தமிழகத்தில் இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரைச் சேர்ந்த 20 வயதான ஜவகர் என்ற இளைஞரே இவ்வாறு உயிர் தியாகம் செய்துள்ளார்.

ஜவகர், பிளாஸ்டிக்கை ஒழிக்க தனி மனிதனாக சாலையில் அமர்ந்தும், டவரில் ஏறியும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

இறுதியில் ஐவகர், தஞ்சாவூர் புதிய ஆற்றுப் பாலத்தின் மேல் தீக்குளித்து ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளார்.

இறப்பதற்கு முன் ஜவகர் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை.

127 கோடி மக்கள் நல்லா வாழ பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும், சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்க வேண்டும், அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.