சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் இருவருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை!!

260

 
ஐ.எஸ். தீவிரவாதிகள் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்ட இருவருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கிழக்கு சிரியாவில் ஈராக்கிய எல்லைக்கு அண்மையிலுள்ள அபு கமால் நகரில் சிறுவர்கள் உள்ளடங்டகலாக பெருமளவான பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீவிரவாதியொருவர் ஒலிபெருக்கி மூலம் அந்த இருவராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல் குறித்து அறிக்கையொன்றை வாசிப்பதையும் பின்னர் அந்த இரு கைதிகளும் நிலவிரிப்பு ஒன்றின் மீது கண்கள் கட்டப்பட்டு கைவிலங்கிடப்பட்ட நிலையில் மண்டியிட்டு அமர்ந்திருக்க அவர்கள் மீது தீவிரவாதிகள் பாரிய கற்களை எடுத்து வீசுவதையும் அந்தப் புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.

1 2 3 4 5