லிபியா அருகே புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு மூழ்கியதில் 17 பேர் உயிரிழப்பு!!

258

boat

லிபியா கடற்கரை அருகே புகலிடக் கோரிக்கையாளர்களி்ன் படகு மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு கடலில் மூழ்கியுள்ளது. படகு மூழ்குவதை அறிந்த, ஐரோப்பிய தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கப்பல் ஒன்று உதவிக்குச் சென்றுள்ளது.

அக்கப்பல் உடனடி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கடல் சீற்றம் அதிகமாகக் காணப்பட்ட காரணத்தால் பலர் காணாமற்போயுள்ளனர்.

அவ்வாறு காணாமற்போயுள்ளவர்களில் 3 வயது குழந்தை ஒன்றும் அடங்குவதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றிரவு படகு மூழ்கியதாகவும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது.