கொள்ளையடித்த பணத்தில் காதலிக்கு ஆடி கார் : இளைஞருக்கு வலைவீச்சு!!

356

car

இந்தியாவில் சாகர் தக்கார் என்ற 23 வயது இளைஞர் கோல் சென்டரில் செய்த ஊழல் பணத்தில் காதலிக்கு பிறந்த நாள் பரிசாக 2.5 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வழங்கியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சாகர் குறித்து தானே பொலிசார் அளித்துள்ள தகவலில், அகமதாபாத்தில் உயர்ரக கார் வாங்கிய முதல் நபர் சாகர் தான். எனினும், அவரின் காதலி குறித்த துப்பு இதுவரை கிடைக்கவில்லை.

சாகரின் பள்ளி நண்பர்களை கைது செய்து விசாரித்ததில் காதலிக்கு அளிக்க போகும் பரிசு குறித்து அவர்களிடம் ஆலோசித்ததாக தெரிவித்துள்ளனர்.

அகமதாபாத்தில் சாகர் வேலையின்றி தான் தங்கை ரிமாவுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் அளித்த தகவல் மூலம் சாகர் குறித்த ஊழலில் ஈடுபட்டுள்ளார். ஊழல் பணத்தில் துபாயில் சாககுருக்கு பெரிய வர்த்தகம் உள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், FBI அதிகாரிகள் சாகர் குறித்து தகவலை கேட்டு தானேவுக்கு விரைந்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு பணமோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது தலைமறைவாக இருக்கும் சாகரை FBI தீவரமாக தேடிவருகின்றனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.