வவுனியா மக்களின் தாராள மனப்பான்மைக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்! என TRAILSL என்கிற காலி கராபிட்டிய வைத்திய சாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவை ஆரம்பிபதற்காக இலங்கை அணியின் கிரிகட் வீரர்கள் மகேல ஜெயவர்த்தனே மற்றும் குமார் சங்ககார ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் கடந்தவாரம் யாழில் இருந்து தொடங்கி நேற்று வவுனியா நகரை கடந்துள்ளது .
மேற்படி நடைபவனிக்கு மாணவர்கள் , அரச தனியார் துறை ஊழியர்கள் ,பாடசாலை சமூகங்கள், வர்த்தகர்கள் எனப்பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டதோடு தங்களாலான நன்கொடைகளையும் வழங்கியிருந்தனர்.
மேற்படி நடைபவனிக்காக வவுனியா மக்களின் ஒத்துழைப்பை பாராட்டி அவர்களது சமூக வலைதளத்தில் வவுனியா மக்களின் தாராள மனப்பான்மைக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம் எனப் பதிவிடபட்டிருந்தது.