புற்று நோயை குணமாக்குவதாக கூறி பெண் மீது பலாத்கார முயற்சி : மந்திரவாதிக்கு சிறை!!

919

pre

பீகாரில் மந்திரவாதி ஒருவர் புற்று நோய் பாதிக்கப்பட்ட பெண்ணை குணமாக்குவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் கைமூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் புற்று நோயால் பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர் தனது கணவருடன் மந்திரவாதத்தால் நோயை குணப்படுத்த முடியுமா என கேட்டு குறித்த மந்திரவாதியை அணுகியுள்ளனர்.

குறிப்பிட்ட நாளில் வந்து பூஜையில் கலந்துகொள்ளுங்கள் என்று மந்திரவாதி தர்மராஜ் கோண்டு கூறியதை அடுத்து அந்த பெண்ணும் குறித்த நாளில் வந்து பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது திடீரென்று மந்திரவாதி தவறான நடவடிக்கையில் இறங்கியதை அறிந்த அந்த பெண், அதற்கு மறுத்துள்ளார். ஆனால் நோய் குணமாக வேண்டும் என்றால் உடலில் குடிகொண்டிருக்கும் அசுத்த ஆவியை துரத்த வேண்டும் என்று கூறிக் கொண்டே அந்த மந்திரவாதி குறிப்பிட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இச்சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் உடனடியாக கூச்சலிட்டு, பூஜை அறையின் வெளியே காத்திருக்கும் உறவினர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

இதனையடுத்து பூட்டப்பட்ட அறையை உடைத்து உள்ளே புகுந்த அந்த பெண்ணின் உறவினர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டதுடன் பொலிஸாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த பொலிஸார் குறித்த மந்திரவாதியை கைது செய்ததுடன் அவரது வீடு மற்றும் பூஜை அறையை சோதனையிட்டுள்ளனர்.

அங்கிருந்து 5 மனித தலையோட்டிகளும் 18,000 ரூபாய் பணமும் சில பூஜை பொருட்களும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட மந்திரவாதி கடந்த 20 ஆண்டுகளாக இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருவதும், வீடு புகுந்து திருடிய வழக்கில் சிறை சென்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனைடையே பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உறவினர் ஒருவர், குறிப்பிட்ட மந்திரவாதி புற்று நோயை குணமாக்குவதாக இவர்களிடம் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி சிறப்பு பூஜைக்காக ரூ.20,000 செலவாகும் என்றும் கூறியுள்ளார் மந்திரவாதி. ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் தங்களின் ஏழ்மை நிலையை விளக்கி கேட்டுக்கொண்டதற்கு இணங்க 15,000 ரூபாயில் பூஜை செய்ய மந்திரவாதி ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது மந்திரவாதியின் பெயரில் ஏமாற்றுதல், பாலியல் வன்முறை உள்ளிட்ட பிரிவுகளில் பொலிஸாரால் வழக்கு பதியப்பட்டுள்ளது.