தமிழ்த் தேசிய மாணவர் பேரவையின் “விடியலை நோக்கி ” செயற்றிட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட குரவில் தமிழ் வித்தியாலயத்தில் உள்ள போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
பேரவையின் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பேரவையின் நிறுவனர் ஆ.யோன்சன் மற்றும் வித்தியாலயத்தின் முதல்வர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த நிகழ்வில் பேரவையின் முக்கிய உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள்.










