வவுனியாவில் 455வது பொலிஸ் நிலையம் திறந்துவைப்பு!!

229

 
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையம் இன்று (15.10.2016) காலை 9.30 மணியளவில் இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வடமாகணசபை உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படையினர் , பொதுமக்கள்,பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றதுடன், புதிதாக அமைக்கப்பட்ட ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தினையும் இலங்கை பொலிஸ்மா அதிபர் பார்வையிட்டார்.

இவ் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையமானது கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016 வரை பொலிஸ் அரணாக காணப்பட்டது. இன்று (15.10.2016) முதல் பொலிஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

இப் பொலிஸ் நிலையத்தின் கீழ் 4 கிராம சேவையாளர் பிரிவுகளில் 11482 மக்கள் வசித்து வருகின்றனர்.

இதேவேளை இன்று 12 மணியளவில் வவுனியா போகஸ்வவையிலும் பொலிஸ்நிலையம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 dsc_0155 dsc_0161 dsc_0166 dsc_0167 dsc_0172 dsc_0176 dsc_0178 dsc_0181 dsc_0185 dsc_0188 dsc_0192 dsc_0193 dsc_0197 dsc_0198 dsc_0203 dsc_0204 dsc_0206 dsc_0211 dsc_0214 dsc_0218 dsc_0222 dsc_0223 dsc_0230 dsc_0236 dsc_0248 dsc_0250 dsc_0252 dsc_0259 dsc_0260 dsc_0265 dsc_0266