நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயல் இழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் ட்ரான்ஸ்மிசன் லைனில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயல் இழந்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த கோளாறு ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
இதனால் மின் உற்பத்தி நிலையத்தின் 3 பிரதான மின் உற்பத்தி இயந்திரங்களும் செயல் இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயல் இழந்துள்ளதால் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.






