செப். 9ம் திகதிவரை நாட்டில் பரவலாக மழை!!

629

rain

நாட்டில் செப்டெம்பர் 9ம் திகதிவரை காற்றுடனான மழை பாங்கான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் மழையை எதிர்பார்க்க முடியும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

புத்தளம், குருநாகல் மாவட்டங்களிலும் மழை பரவல் அடையும் எனவும் நாட்டிலும் நாட்டின் அண்மித்த பகுதிகளிலும் கடும் காற்று மணிக்கு 60கி.மீ வரை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகத்தில் பருவகால காற்று தென்மேற்கு திசையில் வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.