வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் நேற்று (15.10.2016) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இரவு 7 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தின் காரணமாக வீதியால் நடந்து சென்ற முதியவர் ஒருவரும், மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இளைஞனும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை விபத்துக்குள்ளான மோட்டர் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பிச் சென்றுவிட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.