தனது மகள், வளர்ப்பு மகள், நாய், கோழிகளை வல்லுறவுக்குட்படுத்திய நபருக்கு சிறைத்தண்டனை!!

928

raped

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மகள், வளர்ப்பு மக்கள், நாய், கோழிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச் சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இத் துர்நடத்தை குறித்து தனது மனைவியிடம் மேற்படி நபர் ஒப்புக்கொண்டிருந்தார் என நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

3 வயதான தனது மகளை வல்லுறவுக்குட்படுத்திய இந் நபர், 9,11 வயதுக்கிடைப்பட்ட தனது வளர்ப்பு மகள் உறங்கிக் கொண்டிருந்த போது அச் சிறுமியையும் வல்லுறவுக்குட்படுத்தினாராம்.

அத்துடன் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், கோழிகளையும் இவர் வன்புணர்வில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந் நபரின் முன்னாள் மனைவியான பெண் நீதிமன்றில் சாட்சிய மளிக்கியில், “எனது அப்பாவிப் பிள்ளைகள் இத்தகைய உடல், உள ரீதியான கொடூரமான வன்முறைகளுக்கு ஆளாக வேண்டியவர்கள் அல்லர்” எனத் தெரிவித்தார்.

இவ் வழக்கை விசாரித்த நீதிபதி போல் மஸ்கெட், மேற்படி நபருக்கு 6 வருடங்கள் மற்றும் 7 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.