கண்டி-ராஜகல பகுதியில் நான்கு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 65 வயது நபர்(முதியவர்) ஒருவரை சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவு கைது செய்துள்ளது.
பழங்கள் மற்றும் பணம் வழங்கி குறித்த சிறுமிகளுக்கு ஆசைக்காட்டி அவர்களை வல்லுறவுக்கு உட்ப்படுத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“சூனியம் செய்து கொன்று விடுவேன்” என குறித்த நபர் சிறுமிகளையும் அவரது குடும்பத்தையும் அச்சுறுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தென்தெனிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது,இந்த மாதம் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் லேதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.