மட்டக்களப்பில் குடும்பஸ்தர் தற்கொலை!!

757

sucide1

மட்டக்களப்பு றாணமடு மாதிரிக் கிராமத்தில் இளைஞர் ஒருவர் நேற்று(15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, குறித்த நபர் மாதிரி கிராம பாலர் பாடசாலையின் உள்ளே வளையில் சாறியினால் சுருக்கிட்டு இறந்துள்ளதை அறிய முடிகிறது.

மேற்படி தற்கொலை செய்த நபர் கோவிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக் காலமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதனை காணக் கூடியதாக உள்ளது.