வவுனியாவில் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பாக பயிற்சி நெறி இடம்பெற்றதுடன் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (15.10.2016) வவுனியா நெல்லிஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது.
பாதுகாப்பிற்கான பாதை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வினை ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.ராகுலன் ஏபிரகாம் ஏற்பாடுசெய்திருந்தார்.
நிகழ்வில் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பான பயிற்சி பெற்ற பெண்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் சான்றிதழ்களும் அடையாள அட்டையையும் வழங்கப்பட்டது.