யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் நுழைந்த 10 பேரினால், அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். கச்சேரி ஏ9 பிரதான வீதியில் கச்சேரி மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த 10 பேரும் பேரூந்தினை சேதப்படுத்தியதுடன், பேரூந்து நடத்துனரிடமிருந்த பயண சீட்டு புத்தகம் மற்றும் பணத்தையும் பறித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் பேரூந்தை சிறிய லொறி ஒன்றில் வந்த 10 பேர் வழி மறித்து இவ்வாறு நாசவேளையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பயணிகள் தெரிவிக்கையில் பேரூந்தில் நுழைந்த 10 பேரும் அதிக மது போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளனர.
இதேவேளை, அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் பல இடங்களில் பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெறுவதுடன், போதைப் பொருள் பாவனையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






