கடும் வறட்சிக்கு பின்னர் தம்புளையில் மீன் மழை!!

217

 
நான்கு மாதங்களாக நிலவிய கடும் வறட்சிக்கு பின்னர் தம்புளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்றிரவு கடுமையான மழை பெய்துள்ளது.

சுமார் 3 மணித்தியாலங்களாக தொடர்ந்து அந்த பகுதிகளில் மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தம்புளை – சாலுவபுல்லன கிராமத்தில் நுழையும் வீதியில் கிட்டத்தட்ட 100 சிறிய மீன்கள் வானில் இருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மீன்கள் நேற்று இரவு பெய்த மழையுடன் வானில் இருந்து விழுந்ததாக கூறப்படுகின்றது.

f1 f2