யூரோப்பியன் சம்பியன் கராத்தே போட்டியில் ஈழத்துச் சிறுமி சாதனை!!

498

11

2016ஆம் ஆண்டுக்கான யூரோப்பியன் சம்பியன் கராத்தே போட்டி இத்தாலி நாட்டில் கடந்த 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்றது.

இதில் பத்து வயதுப் பிரிவில் காட்டா போட்டியில் ஈழத்து சிறுமி ஒருவர் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

லண்டனில் வசிக்கும் சிவகுமார் அகல்யா என்ற சிறுமியே இரண்டாம் பெற்றுள்ளார். இந்நிலையில், தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த அச்சிறுமி,

தனக்கு கற்பித்த ஆசான்களாலும், பெற்றோர்களாலும் தனது விடாமுயற்சியான பயிற்சியாலும் கிடைத்த வெற்றி என அச்சிறுமி கூறியுள்ளார்.

12