இலங்கையர்களுக்கு கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்!!

836

gem

வியட்நாமில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் அசங்க வெலகெதர இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இந்நதிலையில், வியட்நாமின் பூகோள ரீதியிலான வரைப்படங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் கூறியுள்ளார்.

இதன் ஊடாக இரத்தினக்கல் அகழ்வதற்கான இடங்களை அடையாளம் காண்பதற்கு வியட்நாம் இலங்கைக்கு வாய்ப்பளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும், இலங்கையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு வியட்நாமுடன் இணைந்து தொழில் புரிவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.