இலங்கையின் பிரபல நடிகையான கவீஷா அயேஷானி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார்.
அவரின் உயிரிழப்பு விபத்து எனத் தெரிவிக்கப்பட்ட போதும், அது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சந்தேகத்திற்கு பிரதான காரணமாக விபத்து ஏற்பட்ட காரில் உயிரிழந்த நடிகையுடன் இன்னொரு இளைஞர் இருந்ததாக அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகை பூதவுடலக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காயமடைந்த நிலையில் இளைஞர் ஒருவர் வருகை தந்துள்ளார்.
இவ்வாறு காயமடைந்த வந்த இளைஞரே விபத்து இடம்பெற்ற வாகனத்தில் கவீஷாவுடன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் கவீஷாவின் பிறந்த நாள் விழா இடம்பபெற்ற சந்தர்ப்பத்தில் அங்கும் இந்த இளைஞரை காண முடிந்துள்ளதுள்ளது. இந்
நிலையில் தலையில் காயங்களுடன் கவீஷாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு குறித்த இளைஞர் வருகைத்தந்துள்ளார். அத்துடன் கவீஷாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தர்கள் பலர் இந்த இளைஞரிடம் சென்று கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடிகை கவீஷா அயேஷானி ஓட்டிய வாகனத்தில் இருந்த மற்றைய நபர் தொடர்பில் மீரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






