இலங்கையில் இலத்திரனியல், அரச நடவடிக்கைகளுக்கு தேவையான, வேகமான, பாதுகாப்பான மற்றும் இலவச wi-fi சேவைக்கான புதிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இத்தகவல் அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் அரச நடவடிக்கைகளுக்கு தேவையான 2.0 வலையமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக ஹரின் பெணார்ந்துவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.