ஓயாமல் அழுத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய் மாமன்!!

472

murded

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள சந்தன்நகர் என்ற இடத்தை சேர்ந்தவர் திலீப் பாடியா. இவரது சகோதரிக்கு 3 வயது பெண் குழந்தை இருந்தது.

சகோதரி வெளியே செல்ல வேண்டியது ஏற்பட்டது. எனவே, தனது குழந்தையை மாமன் திலீப் பாடியாவிடம் ஒப்படைத்து பார்த்து கொள்ளும்படி கூறிவிட்டு சென்றார்.

ஆனால், தாயார் வெளியே போனதில் இருந்து அந்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. திலீப் பாடியா குழந்தையை சமாதானப்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சித்தார். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதனால் உச்சக்காட்ட கோபம் அடைந்த திலீப் பாடியா குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இது தொடர்பாக பொலிசில் புகார் செய்யப்பட்டது. பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.