இரண்டு வயதுக் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரன்!!

880

abuse

சென்னையில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன், இரண்டு வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்துள்ள பெருங்குடி கள்ளுகுட்டி என்ற திருவள்ளுவர் நகரிலேயே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

குறித்த நகரை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளை நேற்று முன்தினம் காணவில்லை.

வீட்டிலிருந்தவர்கள் குழந்தையை தேடிய போது, அருகில் இருக்கும் வீட்டில் கைகள் கட்டிய நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.

ரத்தத்துடன் மீட்கப்பட்ட குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், உறவினர்கள் வீட்டிற்கு வந்த விஜி என்ற இளைஞன் தான் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.

இதயைடுத்து தலைமறைவாக உள்ள விஜியை பொலிசார் தேடி வருகின்றனர்.