கர்நாடகாவில் உள்ள கோவிலில் வைத்து பெண் ஒருவரை மர்ம நபர் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலார் பகுதியில் உள்ள கோவிலிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், Kotilingeshwara கோவில் நிர்வாகி குமாரி என்ற பெண்ணே தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட சந்தோஷ் என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கிட்டதட்ட 12 முறை கத்தியால் தாக்கப்டட் குமாரி தலை மற்றும் கைகளில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.
சம்பவம் குறித்து பொலிசார் கூறியதாவது, குமாரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான சந்தோஷ் என பொறியாளரே இத்தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக சந்தோஷ் குமாரி மீது தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.






