லலித் மோடி குற்றவாளியாக அறிவிப்பு!!

353

modi

நிதிமுறைகேடு தொடர்பான விவகாரத்தில் லலித் மோடி குற்றவாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ல் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை உருவாக்கிய லலித் மோடி நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டார் என்ற காரணத்துக்காக 2010ல் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது லண்டனில் வசித்து வரும் இவர் மீதான புகார் குறித்து விசாரணை குழு 133 பக்க அறிக்கை சமர்ப்பித்தது.

இதில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, நிதிமுறைகேடு மற்றும் ஐ.பி.எல் தொடருக்கெதிராக புதிய தொடரை தொடங்க திட்டமிட்டது போன்ற பல்வேறு முறைகேடுகள் இடம் பெற்றுள்ளன.

வரும் 25ம் திகதி சென்னையில் நடக்கவுள்ள பி.சி.சி.ஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் லலித் மோடிக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.